தமிழக மக்களே ரெடியா?… ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு ரூ.5000… வந்தது செம ஹேப்பி நியூஸ்..!

By Nanthini on மார்கழி 7, 2025

Spread the love

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் ரொக்க படமும் வழங்கப்படுகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பண்டிகையின் போது வேட்டி சேலை வழங்கும் நோக்கத்துடன் மாநிலத்தில் உள்ள நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த கைத்தறி, பெடல் தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்துடனும் ஒவ்வொரு வருடமும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு அரசு பரிசுத்தொகை வழங்கவில்லை.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான அறிவிப்பை இந்த மாதம் இறுதியில் அரசு வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது. வேட்டி சேலை மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு ஆகியவற்றை டோக்கன் அடிப்படையில் வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பரிசுத் தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலை ஐந்தாயிரம் ரூபாய் வரை வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.