திக் திக்..! கள்ளத்தொடர்பு காரணமா? அரசியல் முன்விரோதமா?… திமுக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை… அதிகாலையில் நடந்த பயங்கரம்…!!

By Gayathri on ஆவணி 29, 2026

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளிமலைப்பட்டினத்தில் திமுக கிளைப் பிரதிநிதியாக இருந்த நாகராஜ் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை 6 மணியளவில் இருசக்கர வாகனத்தில் டீ வாங்குவதற்காகச் சென்ற இவரை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த முன்னாள் திமுக கிளை அவைத்தலைவர் கந்தசாமி என்பவர் அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். கழுத்து மற்றும் வயிற்றில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொடூரத் தாக்குதலின் போது ஏற்பட்ட கைகலப்பில் குற்றம் சாட்டப்பட்ட கந்தசாமிக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் காவல் துறையினரின் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். தனது மனைவி பாக்யாவுடன் நாகராஜுக்கு தவறான தொடர்பு இருந்ததாக கந்தசாமி சந்தேகப்பட்டதே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அப்பகுதி மக்கள் இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளனர்.

   

தகவலறிந்து விரைந்து வந்த பேரூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆலாந்துறை காவல் ஆய்வாளர் ஆகியோர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தவறான தொடர்பு குறித்த சந்தேகம் பொய்யாக இருக்கலாம் என்பதால், இருவருக்கும் இடையே வேறு ஏதேனும் அரசியல் அல்லது தனிப்பட்ட முன்விரோதம் இருந்ததா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கந்தசாமியிடமும் இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.