தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இந்தக் கட்சிகளுடன் பல கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் யார் வெற்றிவாகை சூடப் போகிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது. அதேசமயம் பாமக, தேமுதிக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளன.
இந்நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் SIR உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா, 2026 தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அளவு மிகப்பெரிய பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்படும். வட இந்தியர்கள் இங்கு வந்து வேலை செய்வதால் அவர்களுக்கு இங்கு ஓட்டுரிமை அளிக்கப்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரேமலதா கூறியுள்ளார். இதனால் பிரேமலதா யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற வெறும் 25 நாட்களிலேயே, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த…
தமிழக பா.ஜ.க-விலிருந்து அதன் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விலகப் போவதாகவும், தனது பிறந்தநாளான இன்று அவர் புதிய அரசியல்…
கடந்த பல வருடங்களாகவே இந்திய இளைஞர்களிடம் ஐடி துறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் பலரும் கம்ப்யூட்டர்…
உலக வெப்பமயமாதல் காரணமாக ஏற்கனவே உலகின் பல நாடுகள் வரலாறு காணாத வெயிலைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழலில், வரும்…
தமிழ்நாடு இந்தியாவிலேயே முற்போக்கான மற்றும் சமூக சீர்திருத்தங்கள் நிறைந்த ஒரு மாநிலமாகத் திகழ்ந்தபோதிலும், காதல் திருமணங்களுக்கு எதிரான சமூகக் கெடுபிடிகளும்…
சமீபகாலமாகவே சாலைகளில் வாகனங்களின் வேகம் அதிகரித்து, விபத்துக்களும் தொடர்கதையாகி வருகின்றன. பைக் மற்றும் கார்களில் செல்பவர்கள் போதிய நிதானமின்றி, அதீத…