தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் போய் கெஞ்சுறீங்களே… உங்க வீரம் எங்கே..? முதலமைச்சர் விஜய்க்கு திமுக ஆ.ராசா காட்டம்..!

By Swetha on ஆனி 3, 2026

Spread the love

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித்தபோது, சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்தும், அரசியல் புரிதல் இல்லாமல் பேசப்படும் விமர்சனங்கள் குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அரசியல் புரிதல் ஏதுமின்றி, பலரும் ‘கவர்ச்சி அரசியல்’ செய்து வருவதாக அவர் சாடினார். சினிமா நடிகர்களின் அரசியல் வருகை மற்றும் செயல்பாடுகள் குறித்தும், அதற்குப் பின்னாலுள்ள அரசியல் வாதங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

சமீபத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறிய தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்து ஆ.ராசா கடுமையான கேள்விகளை முன்வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தொடர்பாகப் போய் கெஞ்சுவதும், கூத்தாடுவதுமாக இருப்பவர்களின் செயல்பாடுகளை அவர் விமர்சித்தார். “தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நீங்கள் போய் கடிதம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே, உங்கள் வீரம் என்ன?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பி, எதிர்த்தரப்பினரின் நிலைப்பாட்டை அவர் சாடினார்.

   

யாரைப் பார்த்து யார் குறை சொல்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பிய அவர், முறையான அரசியல் தெளிவோ, கொள்கை புரிதலோ இன்றி மேலோட்டமாக விமர்சிப்பவர்களைத் தடிமடலாகத் தாக்கினார். வாதத்திற்காக ஒன்றை முன்வைக்கும்போது அதற்குப் பின்னால் இருக்கும் ஆழமான அரசியல் பின்னணியை உணராமல் பேசுவது முறையல்ல என்றும், இதுபோன்ற செயல்பாடுகள் அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது என்றும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டினார்.