NDA-வில் இணையும் தேமுதிக..? ஈஷா மைய சந்திப்புக்கு இதுதான் காரணமா..? பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்… பிப். 20-க்கு முன் நடக்கப்போகும் அந்த மெகா ட்விஸ்ட்..!!

By Soundarya on மாசி 18, 2026

Spread the love

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, அங்கு அவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோருடன் ஒரே வரிசையில் அமர்ந்து உரையாடியது கவனிக்கத்தக்கது. எஸ்.பி.வேலுமணி அவர்கள், பிரேமலதாவை ஈஷா நிறுவனர் சத்குருவிடம் அறிமுகம் செய்து வைத்தது, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அச்சாரமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது ஒரு ஆன்மிகச் சந்திப்பு மட்டுமே என்றும், அங்கு அரசியல் குறித்து எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் பிரேமலதா விளக்கமளித்துள்ளார்.

கூட்டணி குறித்து அவர் பேசுகையில், தங்களது கட்சியின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்த அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று உறுதியளித்தார். இதற்கிடையே, தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள தேமுதிக, வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜக தரப்புடன் தொகுதிப் பங்கீடு குறித்த ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த நேர்காணல் மற்றும் ஈஷா சந்திப்பு ஆகியவை தமிழக அரசியலில் ஒரு பெரிய ‘ட்விஸ்ட்’ ஏற்படப்போவதையே உணர்த்துகின்றன.