தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… 30 மாவட்டங்களில் கட்டும் கனமழை… யாரும் வெளியே வராதீங்க…!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

தமிழகத்தில் டிட்வா புயல் கரையை கடக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. புயல் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் என்றும் நாளை மாலை முதல் டிசம்பர் 1 ஆம் தேதி அதிகாலைக்குள் புயல் வலுவிழக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இன்று இரவில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் படிப்படியாக மழை பொழிவு அதிகரிக்கும்.

மேலும் தமிழகத்தில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், அரியலூர், செங்கை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, புதுகை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, பெரம்பலூர், சிவகங்கை, தென்காசி, தேனி, திருச்சி, திருப்பூர், வேலூர் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.