மூக்கில் ஆக்சிஜன் டியூப்… ICU-வில் திடீர் அனுமதி… ரசிகர்களை கதறவிட்ட பிரபல நடிகையின் அதிர்ச்சி போட்டோ….!

By Nanthini on புரட்டாதி 18, 2026

Spread the love

தென்னிந்திய திரையுலகின் பிரபல முன்னாள் நடிகை டிஸ்கோ சாந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் திடீரெனப் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவர் மருத்துவமனை உடையில், மூக்கில் ஆக்சிஜன் குழாயுடன் காணப்பட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவரது உடல்நிலைக்கு என்ன நேர்ந்தது என்று பதற்றத்துடன் அன்போடு விசாரிக்கத் தொடங்கினர்.

1980-களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் டிஸ்கோ சாந்தி. பிரபல பழம்பெரும் நடிகர் C.L. ஆனந்தனின் மகளான இவர், நடிகர் ஸ்ரீஹரியை மணந்தார். கணவரின் மறைவுக்குப் பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த இவர், சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ராகவா லாரன்ஸின் தம்பி நடிக்கும் ‘புல்லா’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க ஆயத்தமாகி வரும் சூழலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

   

மருத்துவமனை புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் கலக்கமடைந்த நிலையில், தனக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து டிஸ்கோ சாந்தி முதலில் எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், சிறிது நேரத்திலேயே “பேக் ஹோம்” எனப் பதிவிட்டு தான் வீடு திரும்பிவிட்டதை உறுதி செய்தார். இதனால் ரசிகர்கள் ஓரளவு நிம்மதியடைந்தாலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு என்ன நடந்தது என்ற கவலை தொடர்ந்து நிலவி வந்தது.

   

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் டிஸ்கோ சாந்தி உண்மை நிலையை விளக்கியுள்ளார். சென்னை வந்தபோது தீவிர வைரஸ் காய்ச்சல் மற்றும் உடல் வலியால் பாதிக்கப்பட்டு ஐசியூவில் சிகிச்சை பெற்றதாகவும், லண்டன் செல்லும் தனது மகன்களை வழியனுப்ப மருத்துவரிடம் கோரிக்கை வைத்து வீடு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது வீட்டிலேயே மருத்துவ அமைப்புகளுடன் செவிலியர் பராமரிப்பில் குணமடைந்து வரும் அவர், தனது நலனுக்காகப் பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.