Connect with us

நயன்தாரா புருஷன்றதுக்காக இப்படியா..? படப்பிடிப்பில் ஓவரா அலும்பு பண்ணும் விக்னேஷ் சிவன்.. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்..!

CINEMA

நயன்தாரா புருஷன்றதுக்காக இப்படியா..? படப்பிடிப்பில் ஓவரா அலும்பு பண்ணும் விக்னேஷ் சிவன்.. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்..!

 

படப்பிடிப்பு தளத்தில் விக்னேஷ் சிவன் ஓவர் அடாவடித்தனம் பண்ணுவதாக பலரும் கூறி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி என்ற திரைப்படத்தை இயக்கி அறிமுகமான இவர் அதை தொடர்ந்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நயன்தாராவை வைத்து இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து நயன்தாராவையே தற்போது திருமணம் செய்து விட்டார்.

   

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களை இயக்கியதன் மூலமாக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வளம் வருகின்றார் விக்னேஷ் சிவன். இவர் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து எந்த திரைப்படத்தையும் இயக்காத இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிரதிப் ரங்கநாதனை வைத்து எல்ஐசி என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தை நீண்ட நாட்களாக எடுத்து வரும் இவர் படப்பிடிப்பு தளத்தில் சில பிரச்சினைகளை செய்து வருவதாக கோடம்பாக்கத்தில் பலரும் கூறி வருகிறார்கள்.

அதற்கு என்ன காரணம் என்றால் முதலில் இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பணியாற்றி வந்தார். அதனை தொடர்ந்து நிரோஷா அவருக்கு பதிலாக பணியாற்றி வந்தார். இருவரும் அந்த படத்தில் இருந்து இப்போது விலகி இருக்கிறார்கள். இதற்கு காரணம் விக்னேஷ் வந்தான் என்று கூறப்படுகின்றது. ஏனென்றால் ரவிவர்மன் மற்றும் நிரோஷா இவர்களை பொருத்தவரையில் சினிமாவில் மிகப்பெரிய அனுபவம் உள்ள ஒளிப்பதிவாளர்கள்.

அதனால் அவர்கள் விக்னேஷ் இவனை விக்கி என்று அழைத்தார்களாம். இது அவருக்கு மரியாதை குறைவாக இருந்ததாக கூறப்படுகின்றது. தற்போது சமூகத்தில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்திருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் மிகப்பெரிய செலிபிரிட்டியான நடிகை நயன்தாராவின் கணவர் என்ற அந்தஸ்துடன் இருப்பதால் தன்னை மரியாதை இல்லாமல் நடத்துகிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். இதன் காரணமாக அவர்களுக்குள் சில கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் இப்போது வேறு ஒரு ஒளிப்பதிவாளரை தேடி வருகிறாராம் விக்னேஷ் சிவன்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top