நமக்குள் ஒரு விரோதி இருக்கான்.. திடீரென ரசிகர்களுக்கு அறிவுரை கூறி செல்வராகவன் வெளியிட்ட வீடியோ..!

By Nanthini on சித்திரை 13, 2025

Spread the love

பிரபல இயக்குனரான செல்வராகவன் கடந்த 2003-ஆம் ஆண்டு ரிலீசான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு கடந்த 2004-ஆம் ஆண்டு 7ஜி ரெயின்போ காலனி படத்தை இயக்கினார். பின்னர் 2006-ஆம் ஆண்டு புதுப்பேட்டை படத்தை இயக்கி திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களையும் செல்வராகவும் இயக்கியுள்ளார். தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் செல்வராகவனின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது.

யாரிடமும் உதவி கேட்டு நிற்காதீர்கள் - செல்வராகவன் | Don't ask anyone for help - Selvaraghavan

   
ராயன் படத்திற்கு பிறகு அவருக்கு அடுத்த மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்துவிட்டாராம் செல்வராகவன். அதற்கு காரணம் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 ஆகிய படங்களை இயக்க செல்வராகவன் ஆர்வத்தோடு கதையை தயார் செய்கிறாராம். ஏற்கனவே செல்வ ராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு ரிலீசான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.அந்த படத்தின் இரண்டாவது பாகத்தை இப்போது எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
செல்வராகவனை பெருமைப்பட வைத்த தனுஷ் - DHANUSH THAMBINGA DA
தற்போது 50 சதவீத படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாம். மீதமுள்ள 50 சதவீதம் தான் எடுக்க வேண்டி இருக்கிறது. இதனால் நடிப்பதை தவிர்த்து விட்டு இயக்குனராக திரையுலகில் தனக்கு கிடைத்த அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள செல்வராகவன் முயற்சி செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது.  இந்நிலையில் செல்வராகவன் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் செல்வராகவன்.. எல்லாம் அழுவ ரெடியா இருங்க - Cinemapettai
அதில், நமக்குள் ஒரு விரோதி இருக்கிறான். நினைவு தெரிந்த நாளிலிருந்து தொடங்கி நீங்கள் இறக்கும் வரை கூடவே வருவான். எங்கே எப்படி என்ற எந்த விவரமும் தெரியாது. வெளியில் தேடாதீங்க. உள்ளே நீங்க என்ன செய்தாலும் உங்களை ஒருவன் கேட்டுக் கொண்டே இருப்பான். நம் வாழ்வில் எதிர்மறையாக எது நடந்தாலும் கவலைப்பட வேண்டாம் கடவுள் பார்த்துக் கொள்வார். உங்களுக்கு முழு நம்பிக்கையும் கிடைக்கும். முயற்சி செய்தால் எதுவும் நடக்கும் என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Selvaraghavan பதிவைப் பகிர்ந்துள்ளார் (@selvaraghavan)