இந்திய அளவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் தான் ராஜமௌலி. ஈயை வைத்து ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுக்க முடியும் என்று நிரூபித்து காட்டியவர். அதனைத் தொடர்ந்து பாகுபலி படத்தை இயக்கிய அவர் இந்திய அளவில் பிரபலமான இயக்குனராக மாறினார். அந்தத் திரைப்படம் தான் தெலுங்கு திரை உலகில் முதல்முறையாக இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் ஆகும். அடுத்ததாக ஒரு இயக்கிய பாகுபலி 2 திரைப்படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகி ராஜமௌலியின் கேரியரை உச்சகட்டத்திற்கு கொண்டு சென்று நிறுத்தியது. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் மெகா ஹிட் ஆன நிலையில் ராஜமௌலியின் இயக்கம் என்றாலே கோலிவுட் மற்றும் பாலிவுட் உள்ளிட்ட திரை துறைகளில் பலத்தை எதிர்பார்ப்பு எழுந்தது.
இப்படியான நிலையில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கினார். அந்தப் படமும் பல கோடி ரூபாய் அளவில் வசூல் செய்து தெலுங்கு சினிமாவின் வணிகத்தை மேலும் உயர்த்தியது. இந்த படத்திற்கு தேசிய விருது முதல் ஆஸ்கார் விருது வரை கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ராஜமவுலி அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் ராஜமவுலி மகேஷ்பாபுவை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளார்.
அதாவது அடுத்ததாக எடுக்க உள்ள படம் Jungle Action adventure கதைக்களத்தில் உருவாக உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாக உள்ள இந்த படம் வருகின்ற ஏப்ரல் 2025 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 2027 முதல் பாகமும் பிறகு 2029 ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மகேஷ் பாபுவை கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்கு ராஜமவுலி குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்த ஒரு பிரம்மாண்ட காம்போவில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.