30 ஆண்டுகளாக உபயோகமற்றவராக இருந்தவர் விஜய்… வேடிக்கை பொருளை பார்க்க கூட்டம் வரும் – கடும் விமர்சனம் செய்த இயக்குனர் ராஜகுமாரன்!

By Elango on மார்கழி 23, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேச யாரும் முன்வராத நிலையில் அவரது அரசியல் வருகையை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, பிரபலமானவர்களை பார்க்க கூட்டம் வருவது இயல்பு. நாட் ஒன்லி விஜய். விஜய்க்கு கூட்டம் வருகிற இடத்தில் எல்லாம் நீங்க ஒரு சிங்கத்தை கூண்டில் வைத்தாலும் அதை பார்க்க கூட்டம் வரும். ரெண்டுக்கும் பெரிய வித்யாசம் இல்லே.

கூட்டம் கூடுவதால் வேடிக்கை பார்க்கப்படுகிற பொருள் நாம. கடந்த 30 வருஷமா என்னை வேடிக்கை பாருன்னு காமிச்சிருக்கோம். மறுபடியும் அவன் அதைத்தான் பார்க்க வருவான். ஒரு உபயோகமாக பொருள் இல்லே நாம. கடந்த 30 வருஷமா நாம யாருக்கும் உபயோகமா இருந்தது இல்லே. இதுதான் நாம் புரிஞ்சுக்க வேண்டிய விஷயம். அரசியல் என்பது நிஜம். சினிமா என்பது வெறும் கற்பனை என்று இயக்குனர் ராஜகுமாரன் அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.