பிரேம்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார். இயக்குனர் ஆவதற்கு முன்பு பிரேம்குமார் ஒளிப்பதிவாளராக தனது கேரியரை ஆரம்பித்தார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல தமிழ் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார் பிரேம்குமார்.

#image_title
2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி திரிஷா ஆகியோரை வைத்து 96 என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பிரேம்குமார். அதற்கு அடுத்ததாக 2020 ஆம் ஆண்டு 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ஜானு படத்தை இயக்கினார். இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

தற்போது கார்த்தி அரவிந்தசாமி ஆகியோரை வைத்து மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் பிரேம்குமார். இந்த திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த மாதிரி படங்கள் தான் இனி தேவை என்று மக்கள் மெய்யழகன் படத்திற்கு விமர்சனம் கூறியிருக்கிறார்கள். தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பிரேம்குமார் தனது முதல் படமான 96 படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இது நிறைய பேருடைய கதை. ஆனால் இதுல என்னுடைய பகுதியை மட்டும் எடுத்து பன்னினேன். 96 படத்தின் கதையை யாராவது ஒரு டைரக்டர் கையில் கொடுத்துவிடுகிறேன். அவர்கள் செய்வார்கள் என்றேன். ஆனால் இந்தப் படத்தை நீங்கள் டைரக்ட் செய்வதாக இருந்தால் நடிக்கிறேன் என்றார் விஜய் சேதுபதி என்று கூறியுள்ளார்.
