சென்னையில் ரெட் லேபிள் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு பேசியதாவது இந்த படத்தில் பாடிய பாடகி சின்மயி ஏன் இந்த விழாவுக்கு வரவில்லை? இயக்குனர் யார் என்று தெரிந்துதான் பாட்டு பாடினாரா? சின்மயி ஒரு படத்தில் பாடிவிட்டு அந்த படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொள்கிறார். தெரியாமல் பாடிவிட்டேன் என்கிறார். வருத்தம் தெரிவிக்கிறார்.
ஒரு படத்தில் பாடும்போது என்ன சூழல், என்ன வரிகள் என்பதை தெரிந்து கொண்டுதான் பாட வேண்டும். எல்லாம் பாடி முடித்த பிறகு வியாபாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவது போல் நடந்து கொள்ளக் கூடாது. ஒரு படத்தின் கேப்டன் இயக்குனர் தான். இயக்குனர் யார் என்று தெரியவில்லை என்று சொல்வதெல்லாம் தவறாகும். இப்படி சொல்வது அந்த இயக்குனருக்கு மட்டும் அவமானம் அல்ல. ஒவ்வொரு இயக்குனருக்கும் அவமானம். அதற்காக சின்மயி தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குனர் பேரரசு ஆவேசமாக பேசியிருக்கிறார்.
