தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான மைல்கல் திரைப்படமாக கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது பருத்தி வீரன் திரைப்படம். இந்த படத்தில் அறிமுகமான கார்த்தி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். அந்த படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றனர், அந்த படத்தில் பணியாற்றிய அனைவரும்.
ஆனால் பட இந்த பட ரிலீஸூக்குப் பிறகு படத்தில் பணியாற்றிய கலைஞர்களாக அமீர், கார்த்தி மற்றும் ஞானவேல் ராஜா ஆகியோர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. அதற்கு முக்கியக் காரணமாக இயக்குனர் அமீருக்கு தரவேண்டிய ஒரு கோடி ரூபாய்க்கு மேலான பணத்தை தராமல் ஞானவேல் ராஜா ஏமாற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் மிகப்பெரிய வைரலாக இருந்த விஷயம் பருத்திவீரன் தயாரிப்பு குறித்த விவகாரத்தில் அமீர் – ஞானவேல் ராஜா பிரச்னை தான். இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்பது குறித்து இயக்குநர் அமீர் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பல விஷயங்களை கூறியிருக்கிறார்.
ஞானவேல் ராஜா அமீர் சரியாக கணக்கு காட்டவில்லை என்றும் பொய்க் கணக்கு எழுதினார் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து அமீருக்கு ஆதரவாக பல இயக்குனர்களும், பருத்திவீரன் படத்தில் பணியாற்றியவர்களும் பேசினர். இதனால் சூர்யா தரப்பு மேல்தான் மொத்த தவறும் என்பது போல சமூகவலைதளங்களில் பேசப்பட்டது.
இதுகுறித்து இப்போது இயக்குனர் பாண்டிராஜ் பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றது. அவர் ஒரு நேர்காணலில் “அந்த பிரச்சனை நடந்த போது நான் சூர்யா சாருக்கு அழைத்து, ஏன் சார் நீங்கள் இது சம்மந்தமாக எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்றேன். அதற்கு அவர் “ஏன் சார் தேவையில்லாம, நாமும் அந்த கல்லை எடுத்து எறியவேண்டுமா? நான் அவர் மேல் மரியாதை வைத்திருக்கிறேன், அதைக் கெடுக்க வேண்டாமே?’ என்றார்.
நான் ‘அதெல்லாம் சரிதான் சார். ஆனால் வெளியில் இருந்து பார்க்கும்போது முழு தவறும் உங்கள் மேல் என்பது போல உள்ளது’ என்றேன். நாங்கள் சிலர் பேசி ஒரு அறிக்கை ஒன்றை தயார் செய்தோம். ஆனால் அப்போது விஜயகாந்த் சார் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தார். அப்போது வெளியிட்டால் சரியாக இருக்காது என்பதால் காத்திருந்தோம். பின்னர் சென்னை மழை வெள்ளப் பிரச்சனை வந்துவிட்டது. அதனால் அந்த லெட்டர் கடைசி வரை வெளியிடவே இல்லை. அது வந்திருந்தால் சூர்யா சார் பக்கம் இருக்கும் நியாயமும் தெரிந்திருக்கும். அவர்கள் பக்க நியாயம் ரொம்ப நியாயமாகவே இருந்தது” எனக் கூறியுள்ளார்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…