“விஜய்க்கு திமுக தான் ராஜ்யசபா சீட்டு கொடுக்கணும்…” அவரும் அப்படிதான் அரசியல் செய்கிறார்…. இயக்குனர் கரு.பழனியப்பன் பேச்சு…!!

By Devi Ramu on புரட்டாதி 22, 2025

Spread the love

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே திமுக சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரினியல் தமிழ்நாடு என்ற தீர்மான ஏற்பு கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 5 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

விஜய் இந்திய எதிர்த்து தான் அரசியல் செய்கிறார். அதைத்தான் நாங்களும் செய்கிறோம். எங்களுடன் வந்து அவர் நிற்க வேண்டியதுதானே? புது பொருள் பெற்றால் தானே தனிக்கடை போட வேண்டும். நான் எந்த மேடையிலும் விஜய் விமர்சிப்பது இல்லை. ஏனென்றால் திமுக விஜய்க்கு அடுத்த முறை ராஜ்ஜிய சபா சீட்டு கொடுக்க வேண்டும். ஏனென்றால் திமுகவிற்கு அவர் வந்து விடுவார் என பழனியப்பன் கூறியுள்ளார்.