இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ச்சியாக வரிசையாக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் லியோ அடுத்து கூலி என 6 படங்களை இயக்கிய நிலையில் இதில் எல்லா படங்களுமே வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படங்கள்தான். ஆனால் விமர்சன ரீதியாக லியோ மற்றும் கூலி படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்தன.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படங்களில் இரும்புக்கை மாயாவி என்ற கதை முக்கியமானதாக இருந்தது. ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படம் அல்லது நடிகர் சூர்யா நடிக்கும் ஒரு படம் இந்த இரும்புக்கை மாயாவி டைட்டிலில் உருவாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இனி இரும்புக்கை மாயாவி டைட்டிலும் அந்த கதையும் இனி வேண்டவே வேண்டாம் என லோகேஷ் கனகராஜ் தூக்கி போட்டு விட்டாராம். அதற்கு காரணம் பல படங்களில் லோகேஷ் நினைத்திருந்த காட்சிகள் எல்லாம் துண்டு துண்டாக வந்து விட்டன. மேலும் ஒரு படம் முழுவதும் இரும்புக்கை மாயாவி படத்தின் ஸ்டைலிலேயே வந்து விட்டதாம். இனி அப்படி ஒரு படம் எடுத்தால் அது சரிவராது என்பதால் அந்த திட்டத்தையே லோகேஷ் கனகராஜ் கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…
சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…
சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…