CINEMA
சினிமாவே வேண்டாம்.. பிரபல இயக்குனர் கேஸ் ரவிக்குமாரின் 3 மகள்களும் இப்ப என்ன செய்கிறார்கள் தெரியுமா..?
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பலருக்கும் தெரிந்த கே எஸ் ரவிக்குமாருக்கு மூன்று மகள்கள் உள்ளன. பொதுவாக இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் மகள்கள் சினிமா துறைக்குள் நுழைவது என்பது வாடிக்கையாக இருக்கும் ஒரு விஷயம் தான். இயக்குனர் கேஸ் ரவிக்குமாரின் மகள்கள் யாருமே சினிமாவில் நடித்தது கிடையாது. தனது மூன்று மகள்களையும் கேஸ் ரவிக்குமார் சிறப்பாக வளர்த்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருக்கின்றார்.
90ஸ் கிட்ஸ்-களின் பேவுரட் திரைப்படங்களில் அதிகமானவை கேஸ் ரவிக்குமாருடைய திரைப்படமாகத்தான் இருக்கும். அப்படி பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களையும் வைத்து படம் இயக்கி இருக்கின்றார். இப்போது நடிகராக கலக்கி வருகின்றார்.
பல திரைப்படங்களில் அப்பா கதாபாத்திரத்தில், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகின்றார். அது மட்டும் இல்லாமல் டிவி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகின்றார். கே எஸ் ரவிக்குமார் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகளின் பெயர் மல்லிகா. இவர் பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவர் கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட தமிழ் பெண்களின் வாழ்க்கை தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் சூரியன் எப்எம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் லைஃப் கோச்சிங் பயணம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். கோவிட் சமயத்தில் தனக்கு இருந்த மனு அழுத்தம் டென்ஷன் போன்றவற்றிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்தேன்.
அப்போது பூஜா என்பவரை சந்தித்தேன். அவர் என்னுடைய வாழ்க்கையை மாற்றினார். என்னுடைய நிலைமையை பார்த்து எனக்கு ஒரு யோசனை தோன்றியது. என்னுடைய அனுபவங்களை வைத்து நான் ஏன் ஒரு லைஃப் கோச்சாக முடியாது என நினைத்து இந்த பாதையை தேர்வு செய்தேன். இப்போது வரை 800க்கும் மேற்பட்ட தமிழ் பெண்களின் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கின்றேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் கேஎஸ் ரவிக்குமாரின் இன்னொரு மகளான ஜனனி ரவிக்குமார் ஒரு பிட்னஸ் ஆர்வலராக சொந்தமாக தொழில் ஒன்றை செய்து வருகின்றார். இவரது கடைசி மகள் ஜஸ்வதி ஒரு டாக்டராக இருக்கின்றார். சென்னையில் அர்மோரா என்ற டெர்மடாலஜி கிளினிக்கை திறந்து வைத்திருக்கின்றார். இவரின் கணவர் ஒரு மருத்துவர் ஆவார். இப்படி தனது மூன்று மகள்களையும் சினிமா பக்கமே வரவிடாமல் வெவ்வேறு துறையில் சிறந்தவர்களாக மாற்றி இருக்கின்றார் கே.எஸ். ரவிக்குமார்.
இது பல பெண்களுக்கு முன்னுதாரணம் என்றும் ரசிகர்கள் பலரும் கேஸ் ரவிக்குமார் அவர்களை பாராட்டி வருகிறார்கள். இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் திரைத்துறையில் இருப்பதால் தனது மகள்களை கட்டாயம் சினிமாவில் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதை அழகாக செய்து கொடுத்திருக்கின்றார்.