பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கஸ்தூரிராஜா தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் என் ராசாவின் மனசிலே திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு ஆத்தா உன் கோயிலிலே, நாட்டுப்புற பாட்டு, வீரத்தாலாட்டு, எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது மகன் செல்வராகவன் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.இன்னொரு மகன் தனுஷ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். கடைசியாக தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
முதலில் பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த கஸ்தூரிராஜா இப்போது சென்னையில் செல்வாக்குடன் வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் கஸ்தூரிராஜா சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், இளையராஜா சாரை சந்திக்க ஒரு நாள் சென்று இருந்தேன். நீண்ட நாள் ஆகிவிட்டது அவரை சந்தித்து நாமே ஏதாவது ஒரு படம் பண்ணலாம் என்று யோசித்து விட்டு பாடலுக்காகவே அவரிடம் சென்று இருந்தேன். செக்யூரிட்டி உள்ளே விடமாட்டேன் என்கிறார்.
அப்போது, நான் 6 படங்கள் பண்ணியிருந்தேன். ‘நான் இயக்குனர் தான்ப்பா, அவருடனும் படம் பண்ணிருக்கேன்’ என்று அந்த செக்யூரிட்டி இடம் கூறினால், அவர், ‘வரும் எல்லாரும் இதை தான் சொல்றான்’ என்று கடிந்து கொள்கிறார். உள்ளே பார்த்திபன் படத்தின் கம்போசிங் நடந்து கொண்டிருக்கிறது. பார்த்திபன் வந்து அந்த செக்யூரிட்டியை திட்டி என்னை உள்ளே அழைத்துச் சென்றார். பிறகு இளையராஜாவிடம் சென்றதும் எங்க ரொம்ப நாள் காணோம் என்று கேட்டார். சார் அதுக்காக தான் இப்ப திரும்பி வந்து இருக்கேன் அப்படின்னு கூறினேன். அவரை வைத்து தான் நாட்டுப்புற பாடல் என்ற படத்தில் பணியாற்றினேன் என்று கஸ்தூரிராஜா கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…
நேபாளத்தில் உள்ள சேதி ஆற்றில் ஒரு நாயைப் பாலம் வழியே உயிருடன் தூக்கி வீசும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…
தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…