CINEMA
அந்த படத்தை நான் 15 தடவை பாத்துருக்கன்.. பாரதிராஜாவை கூப்பிட்டு சொன்ன ஜெயலலிதா.. எந்த படம் அது தெரியுமா..?
பாரதிராஜா தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் ஒருவர். சினிமாவில் 70ஸ்,80ஸ்களில் பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. கிராமத்து மண்வாசனையில் இயக்கப்பட்ட இவரின் திரைப்படங்கள் அன்றைய கால மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது. 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய் அறிமுகமானார்.
பின் கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, கடலோர கவிதைகள் என இவர் இயக்கிய படங்கள் ஏராளம். இவரின் திரைப்படங்களை இன்று வரை ரசிப்பவர்களும் உண்டு. இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சீரியலை இயக்கியுள்ளார். மேலும் இவரின் முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தன.
இவர் இயக்குனராய் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாகவும் நடித்துள்ளார். நம்ம வீட்டு பிள்ளை, வாத்தி போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனது நடிப்பினையும் வெளிக்காட்டினார். ‘ இயக்குனர் இமயம்’ என கொண்டாடும் ஒரு கலைஞனாக வலம் வந்துகொண்டிருந்த பாரதிராஜாவை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இவரை பல முறை அரசியல் தலைவர்களும் அரசியலுக்கு அழைத்திருக்கிறார்கள்.
ஆனால் பாரதிராஜா, ‘நான், ஒரு கலைஞனாக ஊரை விட்டு வந்தேன், போகும் போதும் என் உடம்பு நல்ல கலைஞன் என்ற பெயரோடு மட்டுமே போக வேண்டும்’ என்று அவற்றை நிராகரித்தார். அப்படி ஒரு முறை ஜெயலலிதா அவர்கள் பாரதிராஜாவிடம், ‘My Door is always open to you Bharathiraja, anytime you can come. we got more respect to you. உங்கள் ‘முதல் மரியாதை’ படத்தை நான் 15 முறை பார்த்தேன்’ என்று கூறியுள்ளார். தற்பொழுது இத்தகவல் தான் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.