#image_title
தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.
அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.
பாலா தன்னுடைய சுயசரிதைப் புத்தகமான ‘இவன்தான் பாலா’வில் தன்னுடைய வாழ்க்கையை எந்த ஒளிவு மறைவுமின்றி பகிர்ந்துள்ளார். ஒரு போக்கிரியாக இருந்த தன்னை சினிமாதான் மனிதனாக்கியது என்று கூறியுள்ளார். அப்படி அவரை பண்படுத்தியதில் அவரின் குருநாதரான பாலு மகேந்திராவுக்கு முக்கியமானப் பங்குண்டு.
அதை பல இடங்களில் பாலா வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பாலா பாலுமகேந்திரா பற்றி பேசும்போது “ஒரு படத்தில் பாலு மகேந்திராவிடம் இருந்த எல்லா உதவி இயக்குனர்களும் அவரை விட்டுப் போய்விட்டார்கள். நான் மட்டும்தான் ஒரே உதவி இயக்குனர். எல்லா வேலையும் நானே இழுத்துப் போட்டு செய்தேன். உன்னால் முடியுமா என்று கேட்டார். முடியும் என்று சொன்னேன்.
அதற்கு அவர் மேல் இருந்த வன்மம்தான் காரணம். நான் அவரிடம் சேர்ந்த புதிதில் ஒரு நாள் அலுவலகத்துக்கு தாமதமாக சென்றேன். அப்போது என்னை சீக்கிரமா வந்து ஆஃபீஸ கூட்டணும்னு தெரியாதா என்று எல்லோர் முன்னாலும் கேட்டார். அப்போது அந்த வன்மம் உருவானது. ஒருநாள் இவர் என்னை சார்ந்து இருப்பார். அப்போது அவர் சொல்லும் வேலையை நான் செய்து முடிக்கவேண்டும் என்று. அப்படிதான் வேலை செய்தேன். இதனால் யாருக்குமே அஸோசியேட் இயக்குனர் என போடாத பாலு மகேந்திரா சார் எனக்கு அடுத்த படத்தில் அப்படி டைட்டில் போட்டார்” எனக் கூறியுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…
உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…
பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…