தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குனராக வலம் வருபவர் ஏ வெங்கடேஷ். சரத்குமார் நடித்த ஏய் மகாபிரபு விஜய் நடித்த பகவதி பிரசாந்த் நடித்த சாக்லேட் சிலம்பரசன் நடித்த குத்து உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஏ வெங்கடேஷ். இவர் அசுரன் அங்காடித்தெரு உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். இதுதவிர பல படங்களில் ஏ வெங்கடேஷ் தற்போது நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சசிக்குமார் நாயகனாக நடித்த மை லார்ட் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் பாலா கலந்துக்கொண்டு பேசினார். அப்போது மேடையில் பேசிய அவர், இயக்குனர் ஏ வெங்கடேசனை தனக்கு யார் என்றே தெரியாது என்றும் அவரது படங்கள் பார்த்தது இல்லை என்றும் வெளிப்படையாக குறிப்பிட்டார்.
தமிழ் சினிமாவில் இதுவரை 40 படங்களை இயக்கிய ஒரு இயக்குனர், நடிகர் ஏ வெங்கடேஷை யார் என்றே தனக்கு தெரியாது என்று இயக்குனர் பாலா மேடையில் சொன்னது அவரை அவமானப்படுத்தும் ஒரு இழிவான செயல் என்று இப்போது ரசிகர்களிடையே கடும் விமர்சனம் எழுந்துள்ளது. 4 படங்களை இயக்கிய மாரி செல்வராஜை புகழ்ந்த பாலாவுக்கு இவரை தெரியவில்லையா? என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
