கார்த்தி இல்லையாம்… ‘பருத்திவீரன்’ படத்தில் முதலில் நடிக்கவிருந்த பிரபல நடிகர் இவரா…? இயக்குனர் அமீரின் ஓபன் டாக்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் திரையுலகில் முதன்முதலில் கால்பதித்த  திரைப்படம் தான் பருத்திவீரன். இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றியை தந்தது.

   

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் மட்டும் இல்லாமல் சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், பிரியாமணி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள். பொதுவாக இந்த திரைப்படத்தின் கதை அம்சம் எவ்வளவு சிறந்ததாக அமைந்ததோ அதேபோல இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றும் மிகவும் தரமாகவும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ரசிகர்களை நடனம் ஆட வைக்கும் அளவிற்கு இருந்தது.

   

2007ல் வெளியான இந்த திரைப்படம் 300 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். காதல், ஜாதி என பக்கா கிராமத்து பின்னணியில் படம் வெளியாகி மாஸ் வெற்றி கண்டது.

தற்பொழுது பருத்தி வீரன் படத்தை இயக்கிய இயக்குனர் அமீர் சுவாரசியமான தகவல் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.அதாவது இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு  பதிலாக முதலில் நடிகர் சூர்யாவை நடிக்க வைக்க தான் அமீர் ஆசைப்பட்டாராம். இந்த தகவலை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இத்தகவலானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.