Connect with us

கடத்தல் தொடர்பான கேள்விக்கு ரஜினி, விஜயை கோர்த்துவிட்ட இயக்குனர் அமீர்.. பிரஷ்மீட்டில் கொந்தளிப்பு..!

CINEMA

கடத்தல் தொடர்பான கேள்விக்கு ரஜினி, விஜயை கோர்த்துவிட்ட இயக்குனர் அமீர்.. பிரஷ்மீட்டில் கொந்தளிப்பு..!

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் உயிர் தமிழுக்கு என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜாபர் சாதிக் வழக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு இயக்குனர் அமீர் பதிலளித்துள்ளார். ஆதாம் பாவா இயக்கத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் உயிர் தமிழுக்கு இந்த திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் இயக்குனர் அமீரிடம் பத்திரிக்கையாளர்கள் பல கேள்விகளை கேட்டனர். உங்கள் நண்பர் ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனாலும் அவர் என்ன தொழில் செய்தார் என்பது உங்களுக்கு எப்படி தெரியாமல் இருந்திருக்கும், இவ்வளவு பணம் எங்கிருந்து வருகின்றது என்று உங்களுக்கு சந்தேகம் ஏன் வரவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

   

 

அதற்கு பதில் அளித்த அமீர் இந்த கேள்வியை நீங்கள் லைக்கா ஓனரிடம் கேட்டீர்களா ஒரு கார்ப்பரேட் நிறுவனம் செய்தால் கேட்க மாட்டீர்கள். ஆனால் என்னை போன்ற தனி நபரிடம் இந்த கேள்வியை கேட்பது என்ன நியாயம். அவர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு இருக்கு, ரஜினி, விஜய் கேட்டார்களா ஏன் என்னை மட்டும் கேட்கிறீர்கள் என்று பதில் அளித்திருந்தார்.

அதை தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த அமீரிடமிருந்து இயக்குனர் கரு பழனியப்பன் மைக்கை பிடுங்கி பேச தொடங்கினார். எல்லாம் யானை எப்படி இருக்கும் என்பதை சொல்ல நினைக்கிறோம். நீங்கள் தடவி பார்ப்பது தும்பிக்கை, நான் தடவி பார்ப்பது கால், அவர் தடவி பார்ப்பது வயிறு, அனைவரின் கண்ணும் கட்டப்பட்டு இருக்கு யாருக்கு என்ன என்பது தெரியாது.

ஊடகத்தினர் அவசரமாக தீர்ப்பு எழுத வேண்டாம். விசாரணையை நீங்கள் நடத்தாதீர்கள். இது உயிர் தமிழுக்கு படத்தின் செய்தியாளர் சந்திப்பு, இதற்கான கேள்வியை மட்டும் நீங்கள் கேளுங்கள் என்று பேசி இருந்தார், கடைசி வரை இந்த பேச்சுக்கு முடிவு வரப் போவதில்லை என்று அவர் கூறியிருந்தார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top