அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணி குறித்துத் தனது பாணியில் நகைச்சுவையாகவும் அதேசமயம் விளக்கமாகவும் பதிலளித்துள்ளார். திருமண உறவோடு கூட்டணியை ஒப்பிட்டுப் பேசிய அவர், இப்போதுதான் நாங்கள் நிச்சயம் செய்துள்ளோம். இனி தான் தாலி கட்ட வேண்டும். குடும்பம் நடத்த வேண்டும். பத்து மாதங்களுக்கு பின்பே குழந்தை பிறக்கும். இப்பவே பெயர் வைக்க சொன்னால் எப்படி முடியும்? என்று நகைச்சுவையாக பேசியுள்ளார். தொகுதிப் பங்கீடு மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் விவரங்கள் தேர்தலுக்கு முன்னதாகத் தெளிவாகும் எனத் தெரிவித்தார்.
மேலும், தேமுதிக கட்சியின் எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதற்காக அவர்கள் மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், மாநில அளவில் தீர்க்க முடியாத சில விஷயங்கள் தேசியத் தலைமையால் பேசப்படுவதாகவும் அவர் கூறினார். “பாஜக எங்களது கூட்டணியில்தான் உள்ளது; சாப்பாட்டில் எத்தனை காய்கறிகள் இருந்தாலும் அவை அனைத்தும் எங்கள் கூட்டணிதான்” என அழுத்தமாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் களத்தில் அதிமுக தலைமையிலான இந்தக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…