FLASH NEWS: அனைத்து மகளிருக்கும்- இரவில் வந்த மகிழ்ச்சி செய்தி… சற்று முன் சிஎம் விஜய் அதிரடி…!

By SATHISH R on ஆனி 29, 2026

Spread the love

தமிழக காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை போலீசார் மிகவும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் அவர்கள் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், “நோ சேஞ்ச், நோ காம்ப்ரமைஸ்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், அதிகாரிகளின் செயல்பாடுகளில் எந்தவொரு தனி நபரினுடைய தலையீடும் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், சமுதாயத்தின் எதிர்காலத் தூண்களாக விளங்கும் பள்ளி மாணவர்களிடையே ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கில், பள்ளிகளில் எவ்வித சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது என்றும், இதில் அரசு மிகவும் உறுதியாக உள்ளதாகவும் முதல்வர் விஜய் அவர்கள் தீர்க்கமாகப் பேசியுள்ளார்.