தயாரிப்பாளர்கள் என்றால் பணக்காரர்களாக தான் இருப்பார்கள். அதுவும் கோலிவுட்டை விட பாலிவுட்டில் தான் அதிக பணப்புழக்கம் இருக்கும். இங்கு நம் ஊர் ஹீரோக்கள் வாங்கும் சம்பளம் தான் அங்கு சாதாரண ஹீரோயின்கள் வாங்குவார்கள். அப்படி இட்னரால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Kalanithi maaran
இப்போது இந்தியாவின் பணக்கார தயாரிப்பாளரின் பெயர் வெளியாகி உள்ளது. பலரும் கரண் ஜோகர் என்றும் ஆதித்யா சோப்ரா என்றும் தான் நினைத்தார்கள். ஆனால் கரண் ஜோக்கரும் இல்லை ஆதித்யா சோப்ராவும் இல்லை. நம் தமிழ்நாட்டை சேர்ந்த கலாநிதி மாறன் தான் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார தயாரிப்பாளர்.

Karan johar
நமக்கு இது ஆச்சர்யமான விஷயம் இல்லை ஆனால் பாலிவுட்டிற்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி தான். கரண் ஜோகர் என்றால் இந்தியா முழுக்க தெரியும், அப்படி பிரபலமான ஒருத்தர். அவர் எடுக்கும் படங்களின் பட்ஜெட் தாறுமாறாக இருக்கும், எங்கு சென்றாலும் லட்சங்களில் தான் உடையே அணிந்து செல்வார் ஆனால் அவர் இந்தியாவின் பணக்கார தயாரிப்பாளர் இல்லை.

Kalanithi maran is the richest producer in indiA
பெரிதும் தன்னை அலட்டிக்கொள்ளாத, எப்போதும் சிபிளாக இருக்கும், சிபிளாக உடை அணியும் கலாநிதி மாறன் தான் இந்தியாவின் பணக்கார தயாரிப்பாளர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். கலாநிதி மாறனின் சொத்துமதிப்பி கிட்டத்தட்ட 19,000 கோடியாம். தயாரிப்பாளர் ரோன்னி இரண்டாவது இடத்தையும், ஆதித்யா சோப்ரா மூன்றாவது இடத்தையும், இராஸ் நிறுவன அர்ஜன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். கரண் ஜோகர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார், இவரது சொத்துமதிப்பு 1,700 கோடி.

karan johar got trolled
எப்போதும் தான் பெரிய ஆள் என அலட்டிக்கொள்ளும் கரண் ஜோகரின் சொத்துமதிப்பு கலாநிதி மாறனின் சொத்துமதிப்பில் ஒரு சதவீதம் உள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா என ரோஸ்ட் செய்து வருகிறார்கள்.
