#image_title
தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.
அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.
Director bala
தமிழ் சினிமாவில் சேது, நந்தா மற்றும் பிதாமகன் என அடுத்தடுத்து தனது முத்திரைப் படங்களால் தன்னை வெளிக்காட்டியவர் இயக்குனர் பாலா. இந்த படங்களுக்குப் பிறகு அவர் தனுஷை வைத்து ‘அகங்காரம்’ என்ற படத்தை இயக்கவிருந்தார். அந்த படம் அவரின் பயோபிக் படமாகதான் உருவாக இருந்தது.
தான் கல்லூரி படத்தில் காலத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தது வரையிலான காலத்தை பாலா இதில் காட்ட இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை. அதற்கிடையில் பாலா நான் கடவுள் படத்தை இயக்க தொடங்கி அந்த படம் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளை எடுத்துக் கொண்டதால் அவரால் அகங்காரம் படத்தைத் தொடங்க முடியவில்லை என சொல்லப்படுகிறது.
actor dhanush
ஆனால் ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் பாலா தன்னுடைய வாழ்க்கையை “இவன்தான் பாலா” என்ற பெயரில் தொடராக எழுதினார். அதற்கு பெரும் வரவேற்புக் கிடைக்க அதன் பின்னர் அது புத்தகமாகவும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…