Connect with us

ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் குடுக்கும் இயக்குனர் தனுஷ்.. இளம் நடிகையை உளி வச்சி செதுக்கும் ‘ராயன்’ ..

CINEMA

ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் குடுக்கும் இயக்குனர் தனுஷ்.. இளம் நடிகையை உளி வச்சி செதுக்கும் ‘ராயன்’ ..

 

தனுஷ் அவர்கள் நீண்ட நாள் பிறகு தானே எழுதி தானே இயக்கம் படம் தான் தனுசு 50 படமான “ராயன்”. இதற்கு முன்னதாக அவர் பா பாண்டி படத்தை இயக்கி நடித்திருந்தார், அதிலிருந்தும் அவர் பெரிதாக முக்கியத்துவம் இல்லாத கதாபாத்தில் நடித்திருந்தார், அதன் பிறகு நானே ஒருவன் படத்தின் கதையை இவரை எழுதி தன் அண்ணன் செல்வராகவன் அவரிடம் கொடுத்து படத்தை இயக்கினார். ஆனால் தற்போது முழுக்க முழுக்க இவரின் எண்ணங்கள் மூலமாக எழுதப்பட்ட படத்தை இயக்க உள்ளார், என்று தெரிவித்ததும் பல லட்ச ரசிகர்கள் பயங்கர ஆர்வத்துடன் இப்படத்திற்கு காத்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு வரவேற்பு மிக பிரம்மாண்டமாக காத்துக் கொண்டிருக்கிறது. தற்போது படத்தில் நடிக்கும் பிரபலங்கள் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் அடங்குவர். ராயன் படத்தை சன் பிக்சர் கலாநிதி மாறன் தயாரி வெளியிட உள்ளார். இப்படத்தில் இசை மலையை ஊற்றும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

   

தற்போது கடந்த சில நாட்களாக இப்படத்தின் நடிக்கும் பிரபலங்களின் இப்படத்தில் வரும் கதாபாத்திரத்தின் தனிப்பட்ட புகைப்படத்தை அவரவர்களின் இணையதளத்தில் வெளியீட்டு வருகிறார்கள், இதுவே படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷன் ஆக அமைந்து கொண்டிருக்கிறது, இவர்கள் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் காரணம் என்னவென்று தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது, தனுஷ் அவர்கள் இப்படத்தில் தன்னைத் தானையும் படத்தின் கதையும் முக்கியமாக படத்தின் இருக்கும் மற்ற பிரபலங்களின் கதாபாத்திரத்தின் வடிவமைப்பை செதுக்கி வருகிறாராம்,

இப்படத்தில் தான் ஹீரோ என்பதற்காக மற்றவர்களை துச்சமாக நினைக்காமல் கதைக்கு மிக முக்கியமான விஷயத்திற்கு மட்டும் தன் கவனத்தை செலுத்தி கதையில் வரும் கதாபாத்திரத்தை பார்த்து பார்த்து உளி வைத்து கல்லை செதுக்குவது போல் செதுக்கி செதுக்கி கொண்டிருக்கிறாராம். முக்கியமாக இப்படத்தில் “துசரா விஜயன்” அவர்களின் கதாபாத்திரம் தனுஷ் அவர்களின் கதாபாத்திரத்தை முழுங்கும் விதமாக அமைக்கப்பட்டு இயக்கி வருகிறாராம், தற்போதைய படத்தின் படப்பிடிப்பு மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறதாம், படம் பார்த்த சில செய்தியாளர்கள் படத்தைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்கள், இப்படம் மிக சிறப்பாக இயக்கப்பட்டு வருகிறதாம், படம் கண்டிப்பாக மக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top