அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தனபால் விலகியுள்ளார். தனது மகனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக லோக் பவன் வந்த அவர், தனக்கு அதிமுகவில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். சைக்கிள் ஓட்டிச் சென்று கட்சியை வளர்த்த தன்னை இன்று தலைமை புறக்கணித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகும் 3-வது முன்னாள் அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
