அந்த விஷயங்களை பார்த்துதான் நான் அவரிடம் இம்ப்ரஸ் ஆனேன்.. தனது காதல் கணவர் குறித்து முதன்முறையாக மனம் திறந்த நடிகை தேவயானி..

By Sumathi

Updated on:

காதல் கோட்டை, சூரிய வம்சம், நினைத்தேன் வந்தாய், கும்மி பாட்டு, நிலவே முகம் காட்டு, என் புருஷன் குழந்தை மாதிரி, விண்ணுக்கும் மண்ணுக்கும், பாட்டாளி, நீ வருவாய் என போன்ற பல படங்களில் மிக பிஸியாக ஒரு காலகட்டத்தில் நடித்துக்கொண்டு இருந்தவர் நடிகை தேவயானி. தமிழில் மட்டுமின்றி மலையாளத்தில் அப்போது பல படங்களில் கமிட் ஆகி, மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி போன்றவர்களுடன் நடித்துக்கொண்டு இருந்தார்.

   

குடும்பப் பாங்கான கேரக்டர் என்றால் உடனே இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு நினைவில் வரும் உருவம் தேவயானியாக தான் இருக்கும். அந்தளவுக்கு ஹோம்லி லுக்கில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருந்த அவரை, தனது இரண்டு படங்களில் நடிக்க வைத்து, அவரை இம்ப்ரஸ் செய்து மணந்துக்கொண்டவர் இயக்குநர் ராஜகுமாரன்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் தேவயானி, தனது கணவர் ராஜகுமாரனுடன் பங்கேற்றார். அப்போது அவர் மனம் திறந்து பல விஷயங்களை பேசினார். அப்போது தேவயானி கூறியதாவது, முதலில் அவர் ஒரு இயக்குநர், ஜீனியஸ் என்ற இம்ப்ரஸ் ஏற்பட்டது. சினிமாவில் அவர் எழுதிய வசனங்களுக்கு நான் மயங்கினேன். அந்தளவுக்கு அவரது வசனங்கள் மிக சிறப்பாக இருந்தது. இப்படி சிந்திக்கும் மனிதர் நிச்சயம் மிக நல்லவராக இருப்பார் என்றும் தோன்றியது. குறிப்பாக நீ வருவாய் என படத்தில் வசனங்கள் என்னை மிகவும் பாதித்தது.

அவர் எழுதிய வசனங்களை வைத்தே, அவரது மன உணர்வுகளை நான் புரிந்துக்கெொண்டேன். நிச்சயமாக இவரை திருமணம் செய்துக்கொண்டால் கடைசி வரை என்னுடன் அன்பாக இருப்பார் என்ற நம்பிக்கை அவர் மீது ஏற்பட்டது. ஆனால் சினிமாவில் பேசியது போல, நிஜத்தில் அவர் வசனம் பேசி என்னிடம் வாழவில்லை. யதார்த்தமாக தான் இருந்தார். ஆனால் உண்மையான அன்புடன் இருந்தார். இப்போதும் இருக்கிறார். கடவுளின் அனுகிரகமும், நான் என் கணவர் மீது வைத்த நம்பிக்கையும் வீண் போகவில்லை. அன்பான கணவராக எனக்கு வாய்த்திருக்கிறார் என்று இந்த நேர்காணலில் கூறி இருக்கிறார் தேவயானி.

a3 3 1
author avatar
Sumathi