தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், ஆட்சியில் பங்கு அளிக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறச் சில கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களாகத் திருமாவளவன், வைகோ மற்றும் கிரிஷ் சோடாங்கர் ஆகியோரின் பேச்சுகள் இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய சில தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக்கணிப்புகள் (Exit Poll) திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய பெரிய கட்சிகளுக்குச் சாதகமாக இல்லாத சூழல் நிலவுகிறது. இத்தகைய ஒரு இழுபறி நிலை ஏற்பட்டால், சிறிய கட்சிகள் ‘கிங் மேக்கராக’ உருவெடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளன.
