சென்னை மாநகராட்சி வளர்ப்பு நாய்களை கண்காணிப்பதற்கும் அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒரு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அதன்படி அனைத்து வளர்ப்பு நாய்களுக்கும் மைக்ரோசிப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மைக்ரோசிப் பொருத்தாத வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக வீடு வீடாக சென்று சர்வே நடத்த உள்ளனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ தீர்மானம் அடுத்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்படவுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று விவரங்களை சரிபார்த்து உரிமம் வராமல் நாய்களை வளர்ப்பது தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படும். அதற்குள் உரிமையாளர்கள் வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம் பெற்று மைக்ரோசிப் பொருத்த வேண்டும். இதனை மீறும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
