பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் எட்டாவது சீசன் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது. எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர். தற்போது தான் போட்டி சூடுபிடித்துள்ளது.

#image_title
ஒருவரையொருவர் தாக்கி பேசியும், சண்டையிட்டும் வருகிறார்கள். இதனால் வார கடைசியில் VJS போட்டியாளர்களை தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார். கமல்ஹாசன் போல் பொறுமையாக பேசாமல் அதிரடியாக பேசி வருகிறார். பிக்பாஸில் இருந்து அர்னவ், அதற்கு முன்பாக ரவீந்தர் எலிமினேட் செய்யப்பட்டார்.

#image_title
இந்நிலையில் போன வாரம் நாமினேஷன் லிஸ்டில் அன்ஷிதா, அருண் பிரசாத், தர்ஷா, ஜாக்குலின், முத்து, பவித்ரா ஜனனி, சத்யா மற்றும் சவுந்தர்யா ஆகியோர் இருந் நிலையில் இந்த வாரம் பெண்கள் அணியில் இருந்து தான் ஒருவர் வெளியேறப்போவதாக கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டார்.

#image_title
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் மூன்று வாரங்கள் இருந்த தர்ஷா குப்தாவின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தர்ஷா குப்தா ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் வாங்கி வந்துள்ளார். மொத்தம் 20 நாட்கள் வீட்டிற்குள் அவர இருந்த நிலையில், ரூ. 5 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
