சிங்கிள் டேக்கில் ஆடும் விஜய்யையே படுத்தி எடுத்த மன்சூர் அலிகான்… பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல வில்லனாக வளம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். ஆர் கே செல்வமணி இயக்கிய புலன் விசாரணை திரைப்படம் அவரை வெகுஜனத்துக்கு பிடித்த நடிகராக்கியது. அதன் பிறகு ஆர் கே செல்வமணி விஜயகாந்த் கூட்டணியில் உருவான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் பிரதான வில்லனாக நடித்தார்.

வீரப்பனின் கதாபாத்திரத்தை அடியொட்டிய வீரபத்ரன் என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அந்த கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வெற்றியால்  அவருக்கு 90 களில் பல படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் பின்னர் 2000களுக்குப் பிறகு அவருக்கு நகைச்சுவையான வேடங்களும் கிடைக்க அதிலும் ஒரு கலக்கு கலக்கினார்.

   

புது தலைமுறை இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘தனக்கு மிகவும் பிடித்த நடிகர் மன்சூர் அலிகான்தான்’ என்று கூறினார். மேலும் தன்னுடைய படத்தில் அவர் பாடல் ஒன்றை வைக்க மன்சூர் அலிகானின் நடனம் இணையத்தில் வைரலானது. மன்சூர் அலிகான் ஒரு தொழில்முறை டான்ஸ்ர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஆண்டு லோகேஷ் இயக்கிய லியோ படத்தில் மன்சூர் அலிகானுக்கு ஒரு சிறிய வேடம் கொடுத்திருந்தார். படத்தில் கதாநாயகனின் நெருங்கிய நண்பர் வேடம் அவர் நடித்தது. அதனால் அந்த படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடிதான் வரவா’ பாடலில் விஜய்யோடு இணைந்து அவரையும் ஆடவைத்தார்.

இந்த பாடல் படமாக்கப்பட்ட போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை நடன இயக்குனர் தினேஷ் பகிர்ந்துள்ளார். அதில் “பாடலில் மன்சூர் அலிகானுக்கு இன்னும் அதிக காட்சிகள் வைத்திருந்தோம். ஆனால் அவரால் சரியாக ஆடமுடியவில்லை. இத்தனைக்கும் அவரும் ஒரு டான்ஸர்தான். ஆனால் டச்சில் இல்லாததால் அவரால் ஆடமுடியவில்லை. இதனால் சிங்கிள் டேக்கில் முடிக்கும் விஜய் திரும்ப திரும்ப ஆடவேண்டி வந்தது. அதனால் ஒரு கட்டத்தில் அவருக்குப் பதிலாக சில காட்சிகளில் மடோனாவை ஆடவைத்து படமாக்கினோம்” எனக் கூறியுள்ளார்.