தைரியம் இருந்தால்…! ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை நீக்கிவிட்டு…. மத்திய அரசுக்கு பகிரங்க சவால் விடுத்த டி.கே.சிவகுமார்..!!

By Soundarya on மார்கழி 18, 2025

Spread the love

பெங்களூருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மத்திய அரசு மாற்ற முயற்சிப்பதாகக் கூறி, முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய டி.கே.சிவகுமார், “மத்திய அரசுக்குத் தைரியம் இருந்தால், ரூபாய் நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தியின் படத்தை நீக்கிவிட்டுப் புதிய படத்தை வைத்துப் பார்க்கட்டும்” எனச் சவால் விடுத்தார். மேலும், பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நாட்டின் அனைத்துத் திட்டங்களுக்கும் ‘மோடி’ என்று பெயர் சூட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று காட்டமாகத் தெரிவித்தார்.