வங்கக்கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, அன்றைய தினம் கோவை, தேனி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, தேனி, மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்றிரவு 7 மணி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
