விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து ஒன்பது மணி நேரமே ஆன பெண் குழந்தையைப் பெற்ற தாயே அவரது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, ஏரியில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் விழுப்புரத்தைச் சுற்றி அரங்கேறியுள்ள இந்த மனிதாபிமானமற்ற செயல், கள்ளத்தொடர்புகளால் ஏற்படும் குடும்பச் சீரழிவின் உச்சக்கட்ட சான்றாக மாறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் காணைகுப்பம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதாவிற்கு, அதே ஊரைச் சேர்ந்த யோகலிங்கம் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூலை 7-ம் தேதி சுதாவிற்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நான்காவது குழந்தையாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தெரிவிக்காமல் அன்று இரவே சுதா குழந்தையுடன் திடீரென வெளியேறியதால், சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் மற்றும் அனைத்து மகளிர் காவல் துறையினர் சுதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் குழந்தையை ஒருவரிடம் ஒப்படைத்ததாகவும், சுடுகாட்டில் வீசியதாகவும் சுதா முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறி போலீசாரை திசை திருப்ப முயன்றார். ஆனால், போலீசார் தங்களது பாணியில் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளக்காதலன் யோகலிங்கத்துடன் சேர்ந்து குழந்தையை அகரம் சித்தாமூர் ஏரியில் வீசி கொலை செய்ததை சுதா ஒப்புக்கொண்டார்.
தன் கணவர் சுரேஷ் சென்னையில் இருக்கும் வேளையில், கள்ளக்காதலன் மூலமாகப் பிறந்த இந்தக் குழந்தை குறித்து கணவருக்குத் தெரிந்தால் குடும்பத்தில் பெரிய பிரச்சினை வெடிக்கும் என்ற பயத்திலேயே இந்தக் கொலையைச் செய்ததாக சுதா வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தத் தகவலின் பேரில் ஏரியில் இருந்து குழந்தையின் உடலை மீட்ட போலீசார், சுதா மற்றும் யோகலிங்கம் ஆகிய இருவரையும் உடனடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…