நடிகர் மற்றும் சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசல்ட்டா இடையேயான தனிப்பட்ட பிரச்சினை ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளாக உள்ளது. முதல் மனைவியைத் விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஏன் இன்னும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் ஜாய் கிரிசல்ட்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அக்குழந்தைக்குத் தான் தான் தந்தை என்று கர்ப்பக் காலத்தில் இருந்தே அவர் கூறி வந்தார். குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தையின் முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாக மாதம்பட்டி ரங்கராஜும் அறிக்கை வெளியிட்டார். ஆனால், விசாரணையின்போது டி.என்.ஏ சோதனை தேவையில்லை என்று ரங்கராஜ் கூறியதாக ஜாய் கிரிசல்ட்டா முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜாய் கிரிசல்ட்டா, மாதம்பட்டி ரங்கராஜை கடுமையாகச் சாடியுள்ளார். “மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தைத் தனமான செயல்களில் ஈடுபடுகிறார். எனது தொலைபேசி எண்ணைத் தெரியாதவர்களிடம் கொடுத்து, எனக்கு செய்தி அனுப்பச் சொல்கிறார். என்னை எல்லா வகையிலும் தாக்க முயல்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ் வைத்திருக்கும் பணம் பத்தும் செய்யும் என்றும், என்னை வீழ்த்துவதற்காக ஒரு கூட்டாளிகளை வைத்து வேலை செய்கிறார்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் அளித்த புகாரின் பேரில் மாதம்பட்டி ரங்கராஜை வரும் டிசம்பர் 12ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழந்தையின் தந்தை யார் என்பதை நிரூபிக்க, மாதம்பட்டி ரங்கராஜ் ஏன் இன்னும் டி.என்.ஏ சோதனைக்கு மாதிரி கொடுக்கவில்லை என்ற கேள்வியையும் பலரும் எழுப்பி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…