சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நயினார் பேட்டை கிராமத்தில் ஆறுமுகம் (35) மற்றும் ரேவதி (32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் ஜனனி என்ற மகளும், வருண் பகவான் (9), வெற்றிவேல் (7) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். ஆறுமுகம் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இப்படியான நிலையில் நேற்று மகன்கள், மகள் பள்ளிக்கு சென்றபோது உறவினர்கள் சிலர் வீட்டுக்கு வந்தனர். வீடு திறந்து கிடந்த நிலையில் உள்ளே சென்று பார்த்த போது ஒரு அறையில் ஒரே சேலையில் ஆறுமுகமும் ரேவதியும் தூக்கில் தொங்கினர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருவரையும் உறவினர்கள் கீழே இறக்கிய நிலையில் ரேவதி இறந்துவிட்டதும் ஆறுமுகத்திற்கு சற்று உயிர் இருப்பதையும் அறிந்த உறவினர்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குடும்ப தகராறில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்களுடைய மூன்று குழந்தைகள் அனாதையாகிவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…