டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாகவும், தனிநபர்களின் கணக்கிற்கு மட்டும் தலா 100 கோடி ரூபாய் சென்று கொண்டிருந்ததாகவும் அவர் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுபோன்ற மிகப்பெரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகத் தற்போது தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், டாஸ்மாக் கடைகளில் இனி மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கினால் கூட, சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அதிரடியாக எச்சரித்துள்ளார்.
