மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் எடை 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாகக் குறைக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. இந்தத் தகவல் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அதிரடி விளக்கமளித்துள்ளது.
இது குறித்து பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், சிலிண்டரின் எடையைக் குறைக்கும் திட்டம் அரசிடம் தற்போது ஏதும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். நாட்டில் போதிய அளவில் சமையல் எரிவாயு இருப்பு உள்ளதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், வழக்கம் போல் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களே தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…