“13,14 வயது மாணவிகளை சீரழித்த கும்பல்…” இட்லி கடை பெண்ணும், மதபோதகரும் சேர்ந்து தீட்டிய திட்டம்…. 12 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி…!!

Spread the love

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு, 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு பள்ளித் தோழிகளைத் திட்டமிட்டு கடத்திய ஒரு கும்பல், அவர்களைப் பல இடங்களுக்குக் கொண்டு சென்று பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியது. இந்தச் சதிச் செயலில் இட்லி கடை நடத்தி வந்த ஒரு பெண்ணும், மதபோதகர் ஒருவரும் முக்கிய  பங்காற்றியது விசாரணையில் தெரியவந்தது.

அந்தச் சிறுமிகளைச் சதீஷ்குமார் – தமிழரசி தம்பதியிடம் விற்று, ஒரு வாடகை வீட்டில் அடைத்து வைத்துத் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். அங்கிருந்து ஒரு வழியாகத் தப்பி வந்த மாணவிகள் காவல்துறையிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, இந்தச் சீரழிவுச் செயலில் ஈடுபட்ட 23 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.

இந்த வழக்கைச் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், ஏற்கனவே மதபோதகர் உட்படப் பலருக்குக் கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதில் நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி மற்றும் கபிலன் ஆகிய மூவரும் தற்போது பிடிபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் அனைத்தும் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது. சுமார் 12 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்குச் சட்டப்பூர்வமான நீதி கிடைத்துள்ளது.

Devi Ramu

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

5 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

6 மணத்தியாலங்கள் ago