அய்யோ… அத்தனை சீனியர்கள் இருந்தும்… பிரகலாத் ஜோஷி ஏன்?… கல்வித் துறையைச் சுற்றிய சர்ச்சை… மோடியின் மாஸ்டர் பிளான் என்ன?…

By Swetha on ஆடி 26, 2026

Spread the love

மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து ஏற்பட்ட நாடு தழுவிய மாணவர்கள் போராட்டங்கள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அளிக்கப்பட்ட இந்த ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின் பேரில், மூத்த பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான பிரகலாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம், மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய முக்கியமான துறைகளின் அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.

   

கர்நாடக மாநிலம் தார்வாட் தொகுதியிலிருந்து தொடர்ந்து 5 முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரகலாத் ஜோஷி, பாஜக தலைமையின் நம்பிக்கைக்குரிய மூத்த தலைவர்களில் ஒருவராவார். முன்னதாக நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகவும் அனுபவம் பெற்ற இவர், தற்போது நாட்டின் தேர்வு முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முக்கியப் பொறுப்பை ஏற்றுள்ளார்.