ரயிலில் திடீர் அலறல்… கல்லூரி பேராசிரியருக்கு நேர்ந்த கதி… மும்பையை உலுக்கிய கொடூரம்…!

By Nanthini on தை 25, 2026

Spread the love

மும்பை புறநகர் ரயிலில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் சக பயணியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் அலோக் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். நேற்று மாலை மாலந்த் ரயில் நிலையம் அருகே ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தக் கொலைக்கான காரணம் குறித்துப் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரயிலில் பயணிக்கும்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சிறிய அளவிலான வாக்குவாதம் தான் வன்முறையாக மாறியது தெரிய வந்துள்ளது. ரயிலில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்திலேயே, ஆத்திரமடைந்த அந்த நபர் பேராசிரியரின் வயிற்றில் சரமாரியாகக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்த பேராசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

   

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீஸார், ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், கொலையாளி யார் என்பதை அடையாளம் கண்ட போலீஸார், சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள்ளாகவே அவரைக் கைது செய்தனர். பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த துயரச் சம்பவம் மும்பை ரயில் பயணிகளிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.