“அதிர்ச்சி… கோவை பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் திடீர் மருத்துவமனை அனுமதி”…. என்ன நடந்தது?….!

By Nanthini on சித்திரை 11, 2026

Spread the love

கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், கடந்த சில நாட்களாக ஓய்வில்லாமல் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீர் கால் வீக்கம் காரணமாக நேற்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அடுத்த 48 மணிநேரத்திற்கு முழுமையான ஓய்வு எடுக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, வானதி சீனிவாசனின் அடுத்த இரண்டு நாட்களுக்கான தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் ஓய்வற்ற வாக்கு சேகரிப்புப் பணிகளே இந்த உடல்நலக் குறைவிற்குக் காரணம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.