கோயம்புத்தூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்தில் பலியான தனபால், மேனகா, சினேகா மற்றும் கனிஷ்கா ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ₹3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் கார் ஓட்டுநர் சரவணனுக்குத் தேவையான அனைத்து உயர் சிகிச்சைகளையும் தடையின்றி வழங்க மருத்துவ அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்தத் துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு முன்னெடுக்கும் என்று அந்த அறிவிப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
