திடீர் திருப்பம்… தமிழகத்தில் கூட்டணி ஆட்சி?… காங்கிரஸ் எடுக்கும் முடிவு… ப.சிதம்பரம் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on தை 1, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்பதால் கூட்டணியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் சமீப காலமாக இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கின்றோம்.

ஐந்து பேரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. அவர்கள் முதலமைச்சரையும் மற்ற தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளனர். இந்தியா கூட்டணி ஒற்றுமையாக வலிமையாக தேர்தலை சந்திக்கும். இந்த தேர்தலில் எங்களுடைய கூட்டணி வெல்லும் என்பது என்னுடைய முழு நம்பிக்கை. தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்கள். ஆனால் அவர் முயற்சி வெற்றி பெறாது. யாருக்கும் யார் போட்டி என்பது தொகுதியை பொருத்து தான் தெரியும்.

   

தொகுதி பங்கீடு குறித்து திமுக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். மற்றவர்கள் கருத்து சொல்லலாம். ஆனால் முடிவு தலைவர்கள் இரண்டு பேருக்கு இடையே தான். 100 நாள் வேலைத்திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியது கண்டனத்திற்குரியது. மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள புதிய வேலை திட்டத்தின் பெயரை யாராலும் உச்சரிக்க முடியாது. ஆட்சியில் பங்கு மற்றும் கூட்டணி ஆட்சி ஏற்படுமா என்பதெல்லாம் இரண்டு கட்சி தலைவர்களும் முடிவு எடுப்பார்கள் என்று அவர் பேட்டியளித்துள்ளார்.