சென்னையில் ரவுடிகளின் அத்துமீறல்களை ஒடுக்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய்யின் நேரடி உத்தரவின் பேரில் காவல்துறை நடத்திய அதிரடி ‘ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்’ மூலம் 75 ரவுடிகள் சினிமா பாணியில் இரவோடு இரவாகச் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். புளியந்தோப்பில் 20, தி.நகரில் 18, அடையாறில் 16, மயிலாப்பூரில் 12 மற்றும் அண்ணா நகரில் 9 எனப் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த குற்றப் பின்னணி கொண்டவர்கள் இந்தத் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளனர். சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இத்தகைய கைது நடவடிக்கைகள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
