கர்நாடக மாநிலம் பீதர் பகுதியில் உள்ள குருநானக் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமி ருத்வி, வழக்கம்போல நேற்று பள்ளி பேருந்தில் வீட்டுக்கு திரும்பி உள்ளார். சிறுமி தன் வீட்டின் அருகே பேருந்தில் இருந்து இறங்கிய போது ஓட்டுநர் சிறுமி இறங்கியதை கவனிக்காமல் பேருந்தை வேகமாக இயக்கியுள்ளார். இதனால் சற்று நேரத்தில் நிலை தடுமாறிய சிறுமி கீழே விழுந்து பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கினார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிறுமியை அந்த பகுதியை மக்களும் பெற்றோரும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் ஓட்டுநரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வாக்காளர்கள் மத்தியில் எழும் மிக முக்கியமான அச்சம் "கள்ள…
தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலையிலேயே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியை 2026-ஆம் ஆண்டு தேர்தல் பதிவு செய்துள்ளது.…
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே உள்ள திராமந்த்கஞ்ச் வேலி பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம், டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்புகளுக்குப் பிறகும் தணியாமல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக, நாம்…