தமிழகத்தில் சொத்துக்களை வாங்குவது மற்றும் விற்பதில் உள்ள சிக்கல்களை குறைப்பதற்கு ஆளில்லா பதிவு (persenceless registration) முறையை அறிமுகப்படுத்துவதற்கு தமிழக அரசு தயாராகிய வருகின்றது. அதன்படி சொத்துக்களை விற்பவரோ, வாங்குபவரோ பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவு நடைமுறைகளை செய்ய முடியும். சார்பதிவாளர் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பத்தை சரி பார்த்து ஒப்புதல் வழங்குவார். 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த நடைமுறை தமிழகத்தில் அமலுக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது.
